விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா...! விரல்கள் உடைந்து... முகத்தில் காயம்... அவரே வெளியிட்ட பரபரப்பு புகைப்படம்

First Published Feb 18, 2021, 4:22 PM IST

40 வயதை கடந்த பின்னரும், தன்னுடைய கட்டழகு கவர்ச்சியால், ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும், வால மீன் மாளவிகா... தான் விபத்தில் சிக்கியுள்ளதாக வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து அவரை சமூக வலைத்தளம் மூலம் நலன் விசாரித்து வருகிறார்கள். 
 

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'உன்னைத் தேடி' என்ற படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா.
undefined
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90 களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
undefined
நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட இவர் அதன் பிறகு பேரழகன் படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றினார்.
undefined
பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றார்.
undefined
அதன் பிறகு கடந்த 2007 ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர்.
undefined
40 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாகவும், உடலை பிட்டாகவும் வைத்திருக்கும் மாளவிகா நடிப்பதை நிறுத்தி முழுக்க முழுக்க குடும்பத்தலைவி ஆகி விட்டார்.
undefined
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கணவர், குழந்தைகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படம் மற்றும் உடல் பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
undefined
இந்நிலையில் இவர் சைக்ளிங் செய்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி, விரல்கள் உடைந்து விட்டதாக... கன்னத்தில் காயங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தான ஒரு போர் வீரர் என்றும் விரைவில் முழு பலத்தோடு திரும்பி வருவேன் என பதிவிட்டுள்ளார்.
undefined
click me!