தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் களைக்கட்டியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகிய பணிகளை எல்லாம் முடித்துக் கொண்டு, தற்போது தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.
undefined
அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்புவிற்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
undefined
தனக்கு பாஜக தலைமை சேப்பாக்கம் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது என அத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது என வேகம் காட்டினார். பின் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
undefined
‘‘பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை”. “வெற்றி கொடியை எட்டிப்பறிக்க போராடி வருகிறேன்” என பஞ்ச் டைலாக் எல்லாம் பேசி மாஸ் காட்டி வருகிறார்.
undefined
இந்நிலையில், நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்பு திடீர் என, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.
undefined
அவருக்கு சிவாஜி கணேசனின் குடும்பத்தினர், ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
undefined
நட்பு ரீதியாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
undefined
கடந்த மாதம் தான், சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம் குமார் தன்னுடைய குடும்பத்துடன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரபுவை பொறுத்தவரை எந்த கட்சியிலும் தன்னை இணைத்து கொள்ளாமல் நடுநிலையாக செயல் பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined