இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து முதன்முறையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் நடிகை பாவனா. அதில் அவர் கூறி இருப்பதாவது: என் கண்ணியம் சுக்குநூறானது. தன்னம்பிக்கையால் தான் தைரியமாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து போராடுவேன். என் கணவரும், குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன்.