300 கோடியில் வீடு; கணவரை விட அதிகம் சம்பாதித்து ராஜ வாழ்க்கை வாழும் இந்த நடிகை யார்?

Published : Feb 12, 2025, 02:54 PM IST

சினிமா துறையின் நட்சத்திர நடிகை.. கோடிக்கணக்கான சொத்துக்களின் வாரிசு.. நட்சத்திர ஹீரோவின் மனைவி. கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பிரபல நடிகை பற்றி பார்க்கலாம்.  

PREV
16
300 கோடியில் வீடு; கணவரை விட அதிகம் சம்பாதித்து ராஜ வாழ்க்கை வாழும் இந்த நடிகை யார்?
வாரிசு நடிகை

நட்சத்திர நடிகை, டாப் இயக்குனரின் மகள், மாஸ் ஹீரோவின் மனைவி. ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்த படத்தில் நடித்தவர். இவரின் கணவர் பெரிய நட்சத்திர ஹீரோவாக இருந்தாலும், அவரை விட அதிக சொத்துக்கள் கொண்ட நடிகையாக இவர் திகழ்கிறார். ஒரு குழந்தையின் தாயாக இருந்தாலும், அழகில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இருப்பார். யார் இந்த நடிகை என்று தானே யோசிக்கிறீர்கள்.

 

26
ஆலியா பட்

அவர் வேறு யாருமல்ல, ஆலியா பட். தான், மேலே சொன்னது போல் அவர் நட்சத்திர இயக்குனர் மகேஷ் பட்டின் மகள், பாலிவுட்டில் நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் இவர் இந்தி நடிகர் ரன்பீர் கபூரின் மனைவி. சுமார் 5 ஆண்டுகள் காதலித்து, லிவிங் டூ கெதர் வாழ்க்கை நடத்திய பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ராஹா என்ற மகளும் உள்ளார். இருப்பினும் ஆலியா பட்டின் அழகு புதிய நடிகைகளுக்கு போட்டியாக உள்ளது. நடிகை மட்டுமல்ல, மாடலாகவும் ஜொலிக்கிறார். 

36
ஆலியா பட் - ரன்பீர் கபூர் சொத்து மதிப்பு

கணவர் ரன்பீர் கபூரை விட அதிகமாக சம்பாதிக்கிறார், ஆலியா பட்டிடம் கணவரை விட அதிக சொத்துக்கள் உள்ளன. அவரது சொத்து எவ்வளவு தெரியுமா.. ஆலியாவின் சொத்து சுமார் 600 கோடிக்கும் அதிகம். அதுமட்டுமின்றி, 300 கோடி மதிப்புள்ள பங்களாவும் கட்டி இருக்கிறார். அதோடு 3 கோடி மதிப்புள்ள சொகுசு காரும் அவரிடம் உள்ளது.

ஆனால் ஆல்யாவின் கணவர் ரன்பீர் கபூரின் மொத்த சொத்து மதிப்பே 345 கோடி தான், ஆலியா பட்டின் சொத்து 550 கோடி. கார்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஆலியா பட்டின் சேகரிப்பில் இன்னும் சில ஆடம்பர கார்கள் உள்ளன. அதோடு ஆலியா பட் சொந்தமாக தொழிலும் செய்கிறார். 

46
ஆலியா பட் பிசினஸ்

ஆல் லைன் புடிக் பிராண்டும் ஆலியாவுக்கு சொந்தமானது. இப்படி பல வழிகளில் ஆலியா பட் சம்பாதிக்கிறார். நடிகையாக அவரது திறமை, நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. கங்கூபாய் படம் அவரிடம் இருக்கும் நடிகையை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியது. அதோடு, ஆர்ஆர்ஆர் மூலம் டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் ஆஸ்கார் அளவுக்கு சென்றது. அதன் பிறகு ஆலியா பட் தெலுங்கில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 
 

56
தேசிய விருது வென்ற ஆலியா பட்

திருமணத்திற்குப் பிறகு கணவருடன் பிரம்மாஸ்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். ஆலியா பட் பிரம்மாஸ்திர 1, சிவா, கங்கூபாய் கதியவாடி, கல்லி பாய் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த 20 படங்களில் 7 படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளன. ஹாலிவுட் தொடரான ஹார்ட் ஆஃப் ஸ்டோனில் ஆலியா நடித்துள்ளார். சினிமாவில் நடிகையாக வெற்றி பெற்றது போல, வியாபாரத்திலும் வெற்றிக் கொடி நாட்டுகிறார் ஆலியா பட். 
 

66
ஆலியா பட்டின் அசுர வளர்ச்சி

எட்-எ-மம்மா என்ற குழந்தைகள் விளையாட்டு உடைகள் நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஆலியா பட். இதன் மூலம் வியாபார உலகில் காலடி எடுத்து வைத்தார். புதுமையான வடிவமைப்புகளுடன் ஆடைகளை தயாரித்து, பிராண்ட் நேம் பெறுவதோடு, வியாபாரத்தையும் படிப்படியாக வளர்த்து வருகிறார். அற்புதமான வடிவமைப்புகள், தரமான வேலை மூலம் வியாபாரத்தை அதிகரித்து வருகிறார். இந்த பிராண்டை தொடங்கி ஒரு வருடத்திலேயே சுமார் 150 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories