வங்கியை நாடும் நடிகர் சங்கம்.. கட்டிடம் கட்ட இன்னும் இவ்ளோ கோடி தேவையா?

First Published May 9, 2022, 2:18 PM IST

நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்றுநடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிக் கடன் பெற்று, கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவராக இருந்த விஜயகாந்த்தை தொடர்ந்து சரத்குமார் நடிகர் சங்க தலைவராக பல ஆண்டுகள் இருந்து வந்தார்.  மூன்று முறை சரத்குமாருடன்,  ராதா ரவி செயலாளராக இருந்து வந்தனர்.

nadigar sangam

அப்போது நடிகர் சங்க இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டதற்கு விஷால் தலைமையிலான இளைய நடிகர்கள் எதிர் குரல் கொடுத்தனர்.  நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற குற்றசாட்டை முன் வைத்து வாக்குவாதம் செய்தனர்.

nadigar sangam

ஆனால் சரத்குமார் தலைமையிலான கமிட்டி ஒப்புக்கொள்ளாததால் தாங்களே களத்தில் இறங்க திட்டமிட்ட விஷால் அணி நாசரை தலைவராக முன்னிறுத்து கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலை சந்தித்தது.

nadigar sangam

பாராளமன்ற தேர்தல் ரேஞ்சுக்கு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் முதல் முறையாக லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பழம்பெரும் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர் நடிகைகள் வரை அனைவரும் வருகை தந்திருந்தனர்.

nadigar sangam

அந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய அணி சரத்குமார் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதை அடுத்து ரஜினி ,கமல் செங்கல் எடுத்து கொடுக்க கோலாகலமாக நடிகர் சங்க கட்டிடம் காட்டும் பணி ஆயத்தமானது.

nadigar sangam

பின்னர் விஷால் அணியின் கமிட்டி காலம் முடிவடியாவே மீண்டும் கடந்த 2019-ம் ஆண்டு மறு தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் கூட்டணிக்கு எதிராக பாக்கியராஜ் தலைமையிலான பாண்டவர் அணி களம் கண்டது. இந்த தேர்தலின் நடந்த பிரச்சனையில் தலையிட்ட நீதிமன்றம் தேர்தல் முடிவுகளை ஒத்தி வைத்து, சங்க நடவடிக்கைகளை கவனிக்க அரசு தரப்பில் அதிகாரியை நியமித்தது.

nadigar sangam

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் விஷால் அணி வெற்றி கண்டது. இதையடுத்து நடிகர் சங்கத்தினர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிலையில் நேற்று நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடிப்பெற்றுள்ளது. 

nadigar sangam

அந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய நாசர், விஷால், கார்த்தி, துணைத் தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர்; நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்ட, பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றுள்ளோம். இன்னும் 40 சதவீத கட்டிடப்பணிகள் முடிவடைய வேண்டியுள்ளது. அதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை. எனவே, வங்கிக் கடன் பெற்று, கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளோம். அதேபோல, நடிகர், நடிகைகளிடமுடம் நிதி திரட்ட உள்ளோம். இன்னும் 3 மாதங்களுக்குள் கட்டிட வேலையைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்.  என கூறியுள்ளனர்

click me!