இனி மறைக்க முடியாது... அரசியலுக்கு காய் நகர்த்தும் தளபதி! விஜய் மக்கள் இயக்க அறிக்கையால் வெளியான உண்மை..!

First Published Oct 27, 2021, 1:57 PM IST

அரசியலுக்கு வர விருப்பமே இல்லை என்பது போல் கூறி, தன்னுடைய பெயரில் அரசியல் கட்சி துவங்கிய அப்பா - அம்மா மீது வழக்கு தொடர்ந்த விஜய், தற்போது மெல்ல மெல்ல அரசியலுக்கு அச்சாணி போட்டு வருவது, அவரது செயல்களில் இருந்தே தெரியவந்துள்ளது. குறிப்பாக தற்போது விஜய் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைவர் என்கிற இடத்தில் விஜய் பெயர் இடம்பெற்றுள்ளது தான் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அரசியலில் பழம் தின்று, கொட்டை போட்ட சில  அரசியல் காட்சிகள் மற்றும் உறுப்பினர்களே, உள்ளாட்சி தேர்தலில் தங்களது இடங்களில் ஜெயிக்க முடியாமல் கோட்டை விட்ட நிலையில், முழுமையாக அரசியலுக்கு வராமலே...  நடிகர் விஜயின் ரசிகர்கள், சுமார் 129 இடங்களில் வெற்றி பெற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

என்ன தான் நான் அரசியலுக்கு வர மாட்டேன்... வர மாட்டேன்... என விஜய் வாய் வார்த்தையாக தளபதி விஜய் கூறிவந்தாலும், தன்னுடைய படங்களில் அரசியல் சார்ந்த விஷயங்களை மையப்படுத்தி நடித்தும், ஆடியோ லான்ச் விழாக்களில் அரசியல் வசனங்களை அள்ளி வீசி சர்ச்சைக்கு அடி போட்டது என எல்லாமே, விஜய்யின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் விதமாகவே இருந்தது.

பின்னர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி விஜய் பெயரில் அரசியல் கட்சியை அதிகார பூர்வமாக பதிவு செய்த போது, வளர்த்த கிடா மார்பில் முட்டிய கதையாக அப்பா, அம்மா, மற்றும் அந்த கட்சியில் பொறுப்பில் இருந்த சிலர் மீது வழக்கு தொடர்ந்து, இந்த கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என அடித்து கூறினர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எஸ்.ஏ.சி தரப்பில் இருந்து அந்த கட்சி கலைக்கப்பட்டு விட்டதாகவும் பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேர் சுயேட்சையாக தேர்தலில் களம் கண்டனர். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 129 பேர் வெற்றி பெற்றது, அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே விஜயின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் விஜய் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம் என, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் 129 'விஜய் மக்கள் இயக்க' வெற்றியாளர்களை சந்தித்து, வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்க பட்ட புகைப்படம் மற்றும் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், என்ன தான் வாய் அளவில் அரசியலுக்கு வர மாட்டேன் என தளபதி கூறி வந்தாலும், 'விஜய் மக்கள் இயக்க' தலைவர் என்கிற இடத்தில் அவர் பெயர் தான் இடம்பெற்றுள்ளது. எனவே... விரைவில் தன்னுடைய அரசியல் வருகை குறித்து விஜய் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வெற்றிபெற்றவர்களை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ...

click me!