தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றன. இதனால் இவருக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது. குறிப்பாக பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளம் உள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றால் அது விஜய் தேவரகொண்டா தான்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகிறது. விஜய் தேவரகொண்டா கெரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகும். இப்படத்தின் மொத்த பட்ஜெட் மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் ஒரு படத்துக்கு ரூ.6 முதல் 7 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த விஜய் தேவரகொண்டா, லைகர் படத்திற்காக தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளாராம். இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.20 முதல் 25 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் வாங்கிய சம்பளத்தை விட இது மூன்று மடங்கு அதிகமாம். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளில் எடுக்கப்பட்டதால் இந்த அளவு தொகையை அவர் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படம் ஹிட்டானால் இதற்கு மேல் சம்பளத்தை உயர்த்தவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
இதையும் படியுங்கள்... பாரதிராஜாவை பார்க்க சென்றேன்... மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள் - டுவிட்டரில் வைரமுத்து உருக்கம்