அந்த அளவுக்கு அவர் ரசிகர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளரான ஜெகதீஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாமக்கலில் உள்ள ஜெகதீஷின் இல்லத்திற்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.