மும்பையில் வீட்டை தொடர்ந்து... அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கிய நடிகர் சூர்யா! விலை மட்டும் இத்தனை கோடியா?

First Published Mar 17, 2023, 9:34 PM IST

நடிகர் சூர்யா சமீபத்தில் மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கிக்கொண்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறிய நிலையில், தற்போது அப்பார்ட்மெண்ட் ஒன்றில் பல கோடி மத்தியில் பிளாட் வாங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் சூர்யா... தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், நடிப்பிக்காக பல்வேறு விமர்சனங்களை பெற்றவர். தன்னுடைய தோல்விகளை வெற்றிப்படிகட்டுகளாக மாற்றி, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சில வருடங்களிலேயே நந்தா, பிதாமகன், போன்ற படங்களில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

தற்போது தன்னுடைய நடிப்பு பசிக்கு தீனிபோடும் வகையில், சவாலான கதாபாத்திரங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா, கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'சூரரை போற்று' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். 

ஹீரோயினாக கூட நடிக்க வேண்டாம்... வாய்ப்பு கொடுத்த லெஜெண்ட் சரவணன்! முடியாது என கூறிய நயன்! பிரபலம் கூறிய தகவல்

நடிகராக மட்டும் இன்றி, தயாரிப்பாளராகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களையும், சமூக அக்கறை கொண்ட படங்களையும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வரும், சூர்யா... திரையுலகை தாண்டி, அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் பல்லாயிரக்கனான குழந்தைகளை படிக்க வைத்து, நல்ல மனிதர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

சமீபத்தில் சூர்யா பாலா இயக்கத்தில் நடித்து வந்த வணங்கான் திரைப்படம், ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று சிறப்பம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சுமார் 500 கோடி பிஸ்னஸ் செய்துள்ளதாக சில பிரபலங்கள் உறுதி செய்துள்ளனர்.

பவித்ரா வலையில் வசமாக சிக்கிய நரேஷ் பாபு? 4-வது மனைவியாக இதுதான் காரணம்.. பகீர் கிளப்பும் முன்னாள் கணவர்!
 

திரைப்பட பணிகள் ஒருபக்கம் பிசியாக போய் கொண்டிருந்தாலும்... நடிகர் சூர்யா திடீர் என, கடந்த ஓரிரு மாதத்திற்கு முன், மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கி கொண்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் செட்டில் ஆனார். இதில் அவரின் தந்தை சிவகுமாருக்கு உடன்பாடு இல்லைஎன்றாலும் , மனைவி ஜோதிகாவின் வற்புறுத்தல் காரணமாகவே இந்த மாற்றம் என கூறப்பட்டது.

இதை தொடந்து, மும்பையில் பிரபலங்கள் பலர் பிளாட் வாங்கி வைத்திருக்கும் அப்பார்ட்மென்டில் சூர்யா புதிய பிளாட் ஒன்றை சுமார் 68 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிளாட் 9,000 சதுர அடி வரை இருக்கிறதாம். இதில் கார்டன் மட்டும், பல கார்கள் பார்க்கிங் செய்யும் வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகள் பர்த்டே பார்ட்டி, விசேஷங்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றை செல்லபிரேட் செய்வதற்காகவே இந்த அபார்ட்மெண்ட்டை வாங்கி இருக்கலாம் தகவல்கள்வெளியாகியுள்ளது.

பல லட்சம் மதிப்பில்.. திருமண மண்டபம் போல் பிரமாண்ட வீடு கட்டிய விஜய் டிவி தீனா! வைரலாகும் கிரஹ பிரவேச போட்டோஸ்
 

click me!