சமீபத்தில் கார்த்தி அதிதி சங்கர் நடிப்பில் வெளியாக உள்ள விருமன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, ஷங்கர், சூரி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் சூரி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேடையில் பேசிய நடிகர், அறக்கட்டளையை குறிப்பிட்டு அவர் பேசுகையில் ஆயிரம் கோயில்கள் அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் எனக் கூறினார். சூரியின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக பல இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஏன் கோவிலை பற்றிய எல்லோரும் பேசுகிறார்கள். மசூதி, சர்ச் பற்றி பேச தைரியம் இல்லையா என பலரும் கேள்வி எழுப்பினர். யார் இப்போது கோவிலை கட்டுகிறார்கள்? எல்லோமே அரசர்கள் கட்டிய கோவில்தான். தமிழகத்தில் இருக்கிற இவையெல்லாம் கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே ஜோதியா இது போன்ற கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கி இருந்தார். தற்போது சூரியின் கருத்து பேசும் பொருளாக மாறியது.
மேலும் செய்திகளுக்கு...அமலா பாலின் 'அதோ அந்த பறவை போல' ..வெளியானது ரிலீஸ் தேதி !