தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த சரத்பாபு, கடந்த சில மாதங்களாகவே செப்சிஸ் என்கிற அரிய வகை பாதிப்பு காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவருடைய உடல்நலம் குறித்த தகவல் வெளியான போது, அவருடைய உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கி விட்டதாகவும், எனவே ஐசுயுவில் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.