தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு. இவர் நேற்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து உடனடியாக பெங்களூருக்கு மாற்றப்பட்டார். அங்கும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்ட சரத்பாபுவுக்கு அங்கு கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.