நகைச்சுவை நடிகர் வடிவேலு, அவருடன் நடிக்கும் சக நடிகர்களை வளரவிடமாட்டார் என்று தொடர்ந்து அவர்மீது ஏராளமானோர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக வடிவேலு குறித்து அவருடன் நடித்த சக நடிகர்களான முத்துக்காளை, மீசை ராஜேந்திரன், சிசர் மனோகர் என ஏராளமான நடிகர்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து பேட்டி கொடுத்து வந்தனர். இவர்களது பேட்டி சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது.