தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, சென்னையில் கல்லூரி படிப்பையும் வெளிநாட்டில் மேற்படிப்பையும் முடித்தவர். அப்பா, அண்ணன் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் கார்த்தி ஆசைப்பட்டது என்னவோ இயக்குநராக வேண்டும் என்று தான்.
undefined
இதற்காக இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து படத்தில் அசிஸ்டெண்டாக கூட பணியாற்றி இருக்கிறார். இடையில் இயக்குநர் அமீர் மூலம் கிடைத்த “பருத்தி வீரன்” பட வாய்ப்பு கார்த்திக்குள் உறங்கிக் கொண்டிருந்த சிறந்த நடிகரை தட்டியெழுப்பி வெளிக்கொண்டு வந்தது.
undefined
அதன் பின்னர் பையாவில் ஆரம்பித்து கைதி வரை போலீஸ், விவசாயி, ராணுவ வீரர் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
undefined
தன்னுடைய கனவு படமான “பொன்னியின் செல்வன்” படத்தில் கார்த்தியின் நடிப்பு குறித்து இயக்குநர் மணிரத்னமே பாராட்டி இருந்தார். அந்த படத்தை காணவும் ரசிகர்கள் செம்ம வெயிட்டிங்கில் உள்ளனர்.
undefined
கல்லூரி காலத்தில் பிரபல நடிகரின் மகன் என்ற பந்தா துளியும் இன்றி அரசு பேருந்தில் பயணம் செய்த புகைப்படம் ஒன்றை நடிகர் கார்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இது நிஜமாவே கார்த்தி தானா என உற்று பார்க்கும் அளவிற்கு அமைதியாக ஆளே அடையாளம் தெரியாமல் அமர்த்திருக்கும் கார்த்தியின் போட்டடோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
அத்துடன், “ பல்லவன், சென்னை மக்களின் நம்பகமான நண்பன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் செலவழித்திருக்கிறேன்” என தன்னுடைய மலரும் நினைவை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
undefined