நடிகர் கார்த்தி வீட்டில் விசேஷம்.... மகிழ்ச்சியின் உச்சத்தில் சிவக்குமார் குடும்பத்தினர்...!

First Published Oct 6, 2020, 12:00 PM IST

நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக அப்பாவாக புரோமோஷன் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்தி வீரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் இளம் நாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.
undefined
'ஆயிரத்தில் ஒருவன்', 'மெட்ராஸ்', 'கைதி' எனப் பல முக்கியமானப் படங்களில் நடித்திருக்கும் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவருகிறார்.
undefined
நடிகர் கார்த்திக்கும் ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.
undefined
அதையடுத்து கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் உமையாள்.
undefined
தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். லாக்டவுனில் கார்த்தி சொன்ன நல்ல செய்தியால் சிவக்குமார் குடும்பத்தினர் மட்டுமல்ல ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
undefined
முதல் முன்று மாதங்கள் சென்னையில் இருந்த கார்த்தி மற்றும் ரஞ்சனி ஜூன் மாதவாக்கில் சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
undefined
தற்போது மனைவியுடன் இருக்கும் கார்த்தி பிரசவத்தையும் அங்கேயே உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
undefined
click me!