இயக்குனர் பா.ரஞ்சித்தின் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசன் எடுத்த புகைப்படம் - வைரல் போட்டோஸ் !!

Published : Feb 12, 2023, 10:21 PM IST

இயக்குனர் பா.ரஞ்சித்தின் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசன் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
15
இயக்குனர் பா.ரஞ்சித்தின் குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசன் எடுத்த புகைப்படம் - வைரல் போட்டோஸ் !!

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புக்ஸ் புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு  நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வருகை தந்து புத்தக விற்பனையகத்தை திறந்து வைத்தார்.

25

இந்த விழாவில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், புத்தக விற்பனை நிலையத்தை கமல் திறந்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தைரியமாக சென்று பார்த்தேன். நேற்று சொன்னதும் அவர் இன்று வந்துவிட்டார். அவருக்கு பெரிய மனது. புத்தகம், இலக்கியங்கள் மீது காதல் கொண்டிருக்கும் அவர் வந்தது மிக்க மகிழ்ச்சி.

இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!

35

புத்தகங்கள் தான் சினிமாவின் பக்கம் என்னை கொண்டு சென்றன. வாசிப்பின் வழியே உலகம் விரிந்தது. சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர் கமல். விருமாண்டி’ படத்தை எழுதிய விதம் அந்த வாழ்க்கை முறையை கையாண்ட முறை ஆச்சரியமளிக்கிறது என்று பேசினார்.

45

அடுத்து பேசினார் கமல் ஹாசன். அப்போது, அரசியலையும் கலாச்சாரத்தையும் தனித்தனியே வைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பேசுவது தான் அரசியல். தனது முதல் அரசியல் எதிரி சாதி.ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைக்கிறேன். தலைவர்களை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்களில் பலர் கீழே குடிமகன்களாக அமர்ந்திருக்கிறார்கள்.

55

கொடூரமான ஆயுதம் சாதி. அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என எனக்கு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்பேத்கரிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் நடந்தபாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் நீட்சியாகத் தான் நீலம் பண்பாட்டு மையத்தையும் பார்க்கிறேன் என்று கூறினார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் குடும்பத்துடன் கமல் ஹாசன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்

Read more Photos on
click me!

Recommended Stories