மொட்டை மாடியில் மூத்த மகனுடன் பஞ்சாயத்து செய்த தனுஷ்... வைரலாகும் போட்டோவிற்கு பின்னால் உள்ள கதை தெரியுமா?

First Published Aug 24, 2020, 6:04 PM IST

நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை விட அதுக்கு பின்னால இருக்கிற கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு... 

கொரோனா காலத்தில் படிப்பிடிப்பு எதுவும் இல்லாததால் திரைப்பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். அப்படி வீட்டில் இருக்கும் பலரும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சோசியல் மீடியாக்களில் அப்டேட் செய்து வருகின்றனர்.
undefined
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட தனுஷும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.
undefined
அசுரன் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய படங்கள் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
undefined
அதுமட்டுமின்றி லாக்டவுன் பிரச்சனைகள் முடிந்த பிறகு இயக்குநர்கள் வெற்றி மாறன் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் இயக்க உள்ள படங்களிலு, இந்தியில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் உடன் அட்ராங்கி ரே என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
undefined
கொரோனா லாக்டவுனை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செலவிட்டு வரும் தனுஷ், தனது வீட்டின் மொட்டை மாடியில் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
undefined
அத்துடன் 'உங்கள் மூத்த மகன் உங்கள் டிசர்ட்டை அணிந்துகொண்டு, தன்னுடையது என்று விவாதிக்கும் தருணம்' என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
undefined
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறார் என்று உங்களை பார்க்கும் யாராலும் முடிவு செய்ய முடியாது என பதிவிட்டுள்ளனர்.
undefined
click me!