சித்ரா மரணத்தில் ஹேமந்த் நண்பர்களுக்கு தொடர்பு?... பகீர் கிளப்பும் பிரபல சீரியல் நடிகர்...!

First Published Dec 18, 2020, 11:27 AM IST

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடிகரான ஆசீம், சித்ராவின் மரணம் குறித்து எழுப்பியுள்ள கேள்விகள் மேலும் சந்தேகங்களை கிளறியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து நசரத் பேட்டை பொலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
undefined
ஹேமந்திற்கும் சித்ராவிற்கு கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கியுள்ளார்.
undefined
நேற்று முன் தினம் சித்ராவின் பெற்றோர் மற்றும் சகோதரர், சகோதரியிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்று சித்ராவின் கணவர் ஹேமந்திடம் விசாரணை நடைபெற்றது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
undefined
சித்ராவின் மரணத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி வருகிறது. சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் மட்டுமல்ல, அவருடைய நெஞ்சிலும் காயம் இருந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தது பரபரப்பை கிளப்பியது.
undefined
தற்போது சித்ரா, பிரபல தொகுப்பாளரும் நடிகருமான ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் ரெசார்ட்டில் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வைத்து சித்ராவை மிரட்டியதாகவும் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் கூறியது சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
undefined
சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என ஆரம்பத்தில் இருந்தே கூறிவரும் சீரியல் நடிகர் ஆசிம், சமீபத்தில் பேட்டி ஒன்றில் எழுப்பியுள்ள சந்தேகங்கள் அதிர்ச்சியை கூட்டுகிறது. சித்ரா கடைசிய நாள் அன்று, விஜய் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். அப்படி ஜாலியாக இருந்தவர் சில மணி நேரத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி?
undefined
சித்ராவின் முகத்தில் உள்ள நகக்கீறல்கள் அவருடையதுதான் என்கிறார்கள். ஆனால் அவரது நெஞ்சிலும் காயம் இருக்கிறதே எப்படி என்று என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சித்ராவின் நெஞ்சில் யாரோ ஓங்கி குத்தியிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் ஆசீம்.
undefined
சித்ராவின் மரணத்தில் ஹேமந்தின் நண்பர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறியுள்ளார். சித்ராவின் மரணம் குறித்து இப்படி அடுத்தடுத்து சந்தேகங்கள் எழுந்து வருவது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
undefined
click me!