கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ரங்கூன் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் இயக்குனராக களம் ராஜ்குமார் பெரியசாமி. சுமார் 7 ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு கடந்த தீபாவளி திருநாளில் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தை ஏற்று மிக நேர்த்தியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் திரைப்படமாக அமரன் மாதிரி உள்ளது.