8th Pay Commission: குறைந்தபட்ச சம்பளம் ரூ.68,000.! சென்னையில் நடந்த கூட்டத்தில் கிடைத்த சிக்னல் என்ன?

Published : Sep 10, 2026, 11:31 AM IST

8வது ஊதியக் குழு சென்னையில் ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தியது. இதில் ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தன. இந்த கமிஷனின் இறுதி அறிக்கை 2027 மே-ஜூன் மாதங்களில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
112
மிகவும் முக்கியமான கூட்டம்
8வது ஊதியக் குழு, செப்டம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் தனது கூட்டத்தை நடத்தியது. தகுதியுள்ள ஊழியர் சங்கங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க இது ஒரு மிக முக்கியமான கூட்டமாக இருந்தது.
212
தகுதியான ஓய்வூதியர் சங்கங்கள்

8வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் முன், தகுதியான ஓய்வூதியர் சங்கங்களின் கருத்துகளை கேட்கும் வகையில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஓய்வூதியத் தொகை, சலுகைகள் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் குறித்து சங்கங்கள் தங்களது கோரிக்கைகளையும் கருத்துகளையும் நேரடியாகத் தெரிவிக்க இந்தக் கூட்டங்கள் முக்கிய வாய்ப்பாக அமைந்தன.

312
ஓய்வூதிய பலன்கள் அதிகரிப்பு

‘தி இந்து’ செய்தியின்படி, ஓய்வூதிய பலன்களை உயர்த்துதல், பென்ஷன் தொடர்பான குறைகளை விரைவாகத் தீர்த்தல், ஓய்வூதியர்களின் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

412
சென்னை ஜிபிஓ (GPO) ஓய்வூதியர் மன்றத்தின் 5 முக்கிய கோரிக்கைகள்

சென்னை GPO பென்ஷனர்கள் மன்றம் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் முக்கியமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கை, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடையே நீண்டகாலமாக நிலவி வருகிறது. மேலும், ஓய்வூதிய பலன்களை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் மன்றம் முன்வைத்தது.

512
உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்:

ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி பாதுகாப்பு கிடைக்கும் வகையில், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஓய்வூதியர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

612
கம்யூட்டட் பென்ஷன்

கம்யூட்டட் பென்ஷன் தொகைக்கான பிடித்தத்தை நிறுத்த வேண்டும் என மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஓய்வூதியர்களின் மாதாந்திர பென்ஷன் தொகை குறைவதால், அவர்களுக்கு ஏற்படும் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கம்யூட்டட் பென்ஷன் தொடர்பான விதிமுறைகளை தெளிவுபடுத்தி, ஓய்வூதியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

712
எம்ஏசிபி

‘மாடிஃபைடு அஷ்யூர்டு கரியர் புரோகிரஷன்’ (MACP) திட்டத்தில் தேவையான மாற்றங்களை 8வது ஊதியக் குழு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தபால் துறை ஊழியர்களின் பணிச்சூழல் மற்றும் சேவைக்காலத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

812
மேம்பட்ட படிகள்

ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு படிகள் மற்றும் விடுமுறைச் சலுகைகளை மேம்படுத்த வேண்டும் என மன்றம் கோரியுள்ளது. அதேபோல், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வலுவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

912
பிற கோரிக்கைகள்

பென்ஷன் கோரிக்கைகள் மட்டுமின்றி, நிரந்தர ஊதிய திருத்த முறை மற்றும் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.68,000 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் கோரினர். தற்போதைய பே மேட்ரிக்ஸ் உடன் 'ரன்னிங் ஸ்கேல்' முறையையும் அறிமுகப்படுத்தக் கேட்டுக்கொண்டனர்.

1012
ஊழியர்களின் பிற முக்கிய விஷயங்கள்
ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகள், பெண் ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
1112
வேலைவாய்ப்பு தொடர்பான பிற சலுகைகள்
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், ஓய்வூதியம், சம்பள உயர்வு போன்றவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இறுதி மாற்றங்கள் அனைத்தும் கமிஷனின் பரிந்துரை மற்றும் அரசின் முடிவைப் பொறுத்தே அமையும்.
1212
சாத்தியமான காலக்கெடு
நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8வது ஊதியக் குழு, நவம்பர் 3, 2025-ல் அமைக்கப்பட்டது. 18 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. இதன் அறிக்கை 2027 மே-ஜூன் மாதத்தில் சமர்ப்பிக்கப்படலாம்.
Read more Photos on
click me!

Recommended Stories