அதே நேரத்தில், முதலீட்டுக்காக தங்கம் வாங்குவது இந்தியாவிலும், உலக அளவிலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கோல்டு ETF (exchange-traded funds), தங்கக் கட்டிகள், நாணயங்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள், சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக, தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கிறார்கள்.
குறிப்பாக இந்தியாவில், CY24-ல் மொத்த தங்கத் தேவையில் 29% தான் முதலீட்டுக்காக இருந்தது. ஆனால், CY25-ல் இது 42% ஆக உயர்ந்துள்ளது. இது, தங்கத்தை வெறும் நுகர்வுப் பொருளாகப் பார்க்காமல், ஒரு நிதிச் சொத்தாகப் பார்க்கும் பழக்கம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
தங்கத்தை இருப்பு வைக்கும் உலக நாடுகள்
உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தின் தேவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொடர்ந்து நான்காவது ஆண்டாக, அவை அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. புவிசார் அரசியல் சவால்கள் இருக்கும் இந்த நேரத்தில், கையிருப்பை பலப்படுத்த தங்கம் உதவுகிறது. மொத்தத்தில், தங்கத்துக்கான தேவை வலுவாக இருந்தாலும், அதன் நுகர்வு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டுக்கான தேவை அதிகரித்து, நகைக்கான தேவை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.