மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது மிகுந்த கவனமும் திறமையும் தேவைப்படும். அதிக வேகம், தொழில்நுட்ப கட்டுப்பாடு மற்றும் பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய சூழல் உள்ளது, இந்த சிறப்பு திறனை மதிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் அலவன்ஸ் உயர்வை வழங்கியுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையால், தகுதியான ரயில்வே ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு சுமார் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரயில்வே பணியாளர்களிடையே இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.