யுபிஐ, கார்டு பேமென்ட் விதிகள் மாற்றமா.. ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. இதை தெரிஞ்சுக்கோங்க

Published : Apr 01, 2026, 12:46 PM IST

ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதியால், யுபிஐ, கார்டு மற்றும் வாலெட் பரிவர்த்தனைகளில் மாற்றம் வந்துள்ளது. புதிய விதிப்படி, ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் குறைந்தது இரண்டு வகையான உறுதிப்படுத்தல்கள் அவசியமாகின்றன.

PREV
15
ஆர்பிஐ டிஜிட்டல் பேமென்ட் விதிகள்

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாக மாற்றும் நோக்கில், ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய விதிமுறைகளை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, இரண்டு நிலை உறுதிப்படுத்தல் (Two-Factor Authentication - 2FA) இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை ஒரே ஓடிபி மூலம் முடிந்த பணப்பரிவர்த்தனைகள் இனி கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்.

25
ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்

ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிப்படி, ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் குறைந்தது இரண்டு வகையான உறுதிப்படுத்தல்கள் அவசியமாகின்றன. அதாவது PIN அல்லது கடவுச்சொல், ஓடிபி அல்லது ஹார்ட்வேர் டோக்கன், மற்றும் பயோமெட்ரிக் (வைரல் ரேகை, முக ஸ்கேன், கண் குருதி ஸ்கேன்) ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பு நிலை பல மடங்கு உயர்த்தப்படுகிறது.

35
ஆர்பிஐ அறிவிப்பு

இந்த விதிகள் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு மட்டுமின்றி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும், சர்வதேச கார்டு பரிவர்த்தனைகளுக்கான முழுமையான அமலாக்க காலக்கெடு 2026 அக்டோபர் மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது. சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை உயர்த்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

45
சிம் க்ளோனிங் மோசடி

சமீப காலமாக ‘பிஷிங்’, ‘சிம் ஸ்வாப்’ போன்ற மோசடிகள் அதிகரித்துள்ளன. இவ்வகை மோசடிகளில், பயனர்களின் ஓடிபி எளிதாக கையகப்படுத்தப்படுவது கவலைக்குரியது. சிம் க்ளோனிங் மூலம் மோசடி செய்பவர்கள் ஓடிபி-ஐ கைப்பற்றும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. புதிய 2FA விதிகள் அமலுக்கு வந்ததால், ஓடிபி மட்டும் போதாது; கூடுதல் பாதுகாப்பு காரணிகள் தேவை என்பதால் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும்.

55
வாலெட்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது

இன்று முதல் யுபிஐ, டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் வாலெட்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது சிறிய மாற்றங்கள் காணப்படும். இரட்டை உறுதிப்படுத்தல் காரணமாக பரிவர்த்தனைக்கு சில விநாடிகள் கூடுதல் நேரம் எடுக்கலாம். அதே நேரத்தில், பயனரின் பயன்பாட்டு முறையை கண்காணித்து பாதுகாப்பு அளவு தானாக மாற்றப்படும். மேலும், மோசடி நடந்தால் வங்கிகளும் கட்டண சேவை வழங்குநர்களும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories