இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை நம்பி உள்ளனர். ஆனால், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. சூழ்நிலைகளில் பயணிகளின் சிரமத்தை குறைக்க, இந்திய ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி சில முக்கிய வசதிகளை வழங்குகின்றன. ஆனால், இந்த உரிமைகள் குறித்து பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை.
24
இலவச உணவு எப்போது கிடைக்கும்?
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக தாமதமானால், பயணிகளுக்கு இலவசமாக காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு அல்லது தேநீர் வழங்கப்படும். ரயில் தாமதமாகும் நேரத்தைப் பொறுத்து இந்த வசதிகள் அளிக்கப்படுகின்றன.
34
முழு டிக்கெட் கட்டணமும் திரும்ப கிடைக்கலாம்
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக தாமதமானாலோ அல்லது பாதை மாற்றப்பட்டாலோ, பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்து முழு கட்டணத்தையும் திரும்பப் பெறலாம். இணையத்தில் முன்பதிவு செய்திருந்தால் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எடுத்த டிக்கெட்டுகளுக்கு, ரயில் நிலையத்தில் நேரடியாக ரத்து செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
சில சூழ்நிலைகளில் பயணிகளுக்காக ஓய்வறை வசதி, கூடுதல் நேரம் இயங்கும் உணவகங்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் ரயில்வே பாதுகாப்பு படை பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்படுவர். எனவே, ரயில் தாமதமானால் உங்கள் உரிமைகள் என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, தேவையான வசதிகளை சரியான நேரத்தில் பெற உதவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.