தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டுக்கொண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. போர் பதற்றம் போன்ற காரணங்களால், இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400 ஆகவும், வெள்ளி கிலோ ரூ.4,25,000 ஆகவும் விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டா போட்டிக் கொண்டு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த விலை உயர்வுக்கு அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம், முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் என கூறப்படுகிறது. அதாவது 23 நாட்களில் தங்கம் சுமார் ரூ.30,000க்கும், வெள்ளி ஒரு லட்சத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
24
நேற்றைய தங்கம் விலை
நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.650 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,610க்கும், சவரனுக்கு ரூ.5200 உயர்ந்து ரூ.1,24,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
34
உச்சத்தில் தங்கம் விலை
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 29) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.1.190 உயர்ந்து ரூ.16,800ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.18,327ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.146,616ஆக விற்பனை செய்ய்படுகிறது.
தங்கத்துடன் வெள்ளியும் போட்டு போட்டுக்கொண்டு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.25 அதிகரித்து ரூ.425க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.425,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.