இதற்கிடையே, சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், ரிசர்வ் வங்கியின் கவனம் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு திரவத்தன்மை வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கத் தயார் என சிக்னல் தரப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பில் உள்ள ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய பதற்றங்கள் இருந்தாலும், இந்த முறை வட்டி முடிவில் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர். டிசம்பருடன் ஒப்பிடுகையில் பொருளாதார நிலை சற்று மேம்பட்டுள்ளது. பணவீக்கம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் வாய்ப்பு, தொழில் மற்றும் நுகர்வு துறைகளில் காணப்படும் நல்ல அறிகுறிகள்—இவை அனைத்தும் ஆர்பிஐ-க்கு நம்பிக்கையளிக்கின்றன. பிப்ரவரி 6 முடிவு, வட்டிக்கான அறிவிப்பை விட, வீட்டுக் கடன் வைத்திருப்பவர்களின் எதிர்கால நிதித் திட்டத்தையே தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.