பாம்புக், வாங்கரா, புரே, கலம் மற்றும் தகாசா போன்ற பகுதிகளில் தங்கச் சுரங்கங்கள் தான் இவரின் செல்வச்செழிப்புக்கு காரணம். அவரது சாம்ராஜ்யத்தில் ஐவரி கோஸ்ட், செனகல், மாலி மற்றும் புர்கினா பாசோ போன்ற இன்றைய நாடுகளும், டிம்புக்டுவை அதன் தலைநகராகக் கொண்டிருந்தது. மான்சா மூசா வெறும் செல்வந்தர் மட்டுமல்ல. அவர் தனது பெருந்தன்மைக்கும். ஞானத்திற்கும் பெயர் பெற்றவர். அவரது மாலியன் தங்கப் பரிசுகள் மிகவும் பிரமாண்டமாக இருந்தன.