தென்னை சாகுபடிக்கு ரூ.7,500 வரை மானியம்! கூடுதலாக பயிர் காப்பீட்டு உதவி! தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்!

Published : Jun 28, 2025, 01:51 PM IST

தமிழ்நாட்டில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்க, தென்னை வளர்ச்சி வாரியம் பல்வேறு மானியங்களை வழங்குகிறது. நாற்று நடவு, பயிர் காப்பீடு மற்றும் மதிப்புக்கூட்டும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

PREV
19
லாபத்தை அள்ளிக்கொடுக்கும் தென்னை

தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில், தென்னை வளர்ச்சி வாரியம் பல்வேறு மானிய உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை நகரிலிருந்து கோயம்புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகம், தற்போது நேரடியாக விவசாயிகளை சேவை செய்யும் பணியை செய்து வருகிறது.

29
முக்கிய மானிய உதவி திட்டம் – நாற்று நடவு நிதியுதவி

விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னங்கன்றுகள் நடவு செய்வதை ஊக்குவிக்க, அரசு பெரும் நிதி உதவி அளிக்கிறது. குறிப்பாக, ஒரு ஹெக்டேர் நிலத்தில் 160 தென்னை நாற்றுகளை நடவு செய்வதற்கான மானியம் கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

நெட்டை ரகம் – ரூ.6,500/-

கலப்பின ரகம் – ரூ.6,750/-

குட்டை ரகம் – ரூ.7,500/-

39
எப்படி வழங்கப்படும்

இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இரண்டு தவணைகளில் செலுத்தப்படும். அதாவது, நாற்று நடவு செய்து வளர்ப்பு நடவடிக்கைகள் முடிவுற்ற பின், தகுதி பெறுபவர்களுக்கு மானியம் நேரடியாக கிடைக்கும்.

49
எப்படி விண்ணப்பிப்பது?

முதலில், www.coconutboard.gov.in இணையதளத்தில் சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேவையான விவரங்கள் (நில உரிமை ஆவணம், அடையாளச் சான்று, வங்கி பாஸ் புக் நகல் போன்றவை) இணைத்து பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவசாயி தன் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் சான்று பெற்றுக் கொண்டு, கோயம்புத்தூர் மண்டல அலுவலகத்திற்கே நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

59
பயிர் காப்பீட்டு திட்டம்

எதிர்பாராதவிதங்களில் மரங்கள் சாகும் அபாயம் இருந்தால், விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் தொகையை மூன்று பாகங்களாக அரசு பங்களித்து உதவுகிறது. இதனால் குறைந்த செலவில் காப்பீட்டுப் பாதுகாப்பு கிடைக்கும். வளர்ச்சியடையும் முதல் நாற்சாம்பல் வரை பயிர் நஷ்டத்திற்கான இழப்பீடு பெற முடியும்.

50% – தென்னை வளர்ச்சி வாரியம்

25% – மாநில அரசு

25% – விவசாயி பங்களிப்பு

69
மதிப்புக்கூட்டும் நடவடிக்கைகளுக்கு மானியம்

தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், தேங்காய் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் யூனிட்கள் தொடங்கும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பதிவு பெற்ற கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு திட்டச் செலவில் 25% வரை பின் ஏற்பு மானியம் வழங்கப்படுகிறது. இதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுதாய விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு அதிக அளவு ஊக்கம் அளிக்க, மானியம் 33.3% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

79
தொழில்நுட்ப ஆலோசனை

தென்னை வளர்ச்சி வாரியம், புதிய ரகங்களை தேர்வு செய்வது, இடம் தயாரித்தல், நாற்று நடவு, தண்ணீர் மேலாண்மை, பூச்சிமருந்துப் பிரயோகங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது. பயிற்சி முகாம்கள், சந்தை தகவல்கள், உற்பத்தி மேம்பாட்டு வழிகாட்டுதல்களும் பெறலாம்.

89
உதவி பெற அழையுங்கள்

தமிழ்நாடு மண்டல அலுவலகம்,

தென்னை வளர்ச்சி வாரியம்,

எண்.248/1, ஜி.வி. ரெசிடென்சி, சவுரிபாளையம்,

கோயம்புத்தூர் – 641028.

தொலைபேசி: 0422 – 2993684, 2993685.

99
அரசு செய்யும் உதவியை பயன்படுத்தி லாபம் பெறலாம்

இந்த முக்கிய வாய்ப்புகளை விவசாயிகள் பயன் படுத்தி, குறைந்த முதலீட்டில் தென்னை சாகுபடி பரப்பை விரிவாக்கி அதிக வருமானம் பெறலாம். மேலும், சுயதொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள் இந்த மானிய உதவியால் புதிய முயற்சிகளை துவங்கலாம். விவசாய வருமானத்தை அதிகரிக்கவும், தென்னையின் மதிப்பைக் கூட்டவும் விரைந்து விண்ணப்பிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories