ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கொட்டிக்கிடக்கும் சலுகைகள்.. முழு விபரம் உள்ளே!

Published : Mar 10, 2026, 05:40 PM IST

Indian Railways Senior Citizen Benefits: ரயிலில் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. என்னென்ன சலுகைகள் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
ரயிலில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள்

இந்தியாவின் போக்குவரத்தில் ரயில்வே துறை உயிர்நாடியாக உள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் எனப்படும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் பயணத்தை எளிதாக்கவும், பாதுகாப்பானதாக மாற்றவும் பல்வேறு பிரத்யேக வசதிகளை ரயில்வே செய்து கொடுத்துள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

25
1. லோயர் பெர்த் முன்னுரிமை

ரயிலில் ஏறுவதிலும், மேல் இருக்கைகளுக்குச் செல்வதிலும் முதியவர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது. ஆகையால் 60 வயது கடந்த ஆண்கள் மற்றும் 58 வயது கடந்த பெண்களுக்கு ஸ்லீப்பர் (Sleeper) மற்றும் ஏசி பெட்டிகளில் (2A, 3A) கீழ் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. 

ஒருவேளை முன்பதிவின் போது கீழ் இருக்கை கிடைக்காவிட்டாலும், பயணத்தின் போது காலியாக இருந்தால் டிக்கெட் பரிசோதகர் (TTE) மூலம் அதை முதியவர்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

35
2. நெரிசலற்ற டிக்கெட் முன்பதிவு

முதியவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிரமப்படக் கூடாது என்பதற்காக, முக்கிய ரயில் நிலையங்களில் தனி டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் எவ்வித அலைச்சலும் இன்றி விரைவாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

3. சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர்கள்

நடக்க இயலாத அல்லது உடல்நலம் குன்றிய பெரியவர்களுக்காகப் பெரிய ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி (Wheelchair) வசதி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு உதவ போர்ட்டர் சேவைகளும் உண்டு. இதை முன்கூட்டியே ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது.

45
4. பிளாட்பார பயணத்திற்கு பேட்டரி கார்கள்

பெரிய ரயில் நிலையங்களில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்குச் செல்வது முதியவர்களுக்கு சவாலான காரியம். இதற்காகவே பேட்டரி மூலம் இயங்கும் சிறிய வாகனங்கள் (Golf Carts) இயக்கப்படுகின்றன. இந்த வசதி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும்.

55
5. புறநகர் ரயில்களில் தனி இட ஒதுக்கீடு

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் இயக்கப்படும் லோக்கல் ரயில்களில், மூத்த குடிமக்களுக்கென தனியான இருக்கைகள் (Reserved Seats) ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அலுவலக நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்காமல் அவர்கள் நிம்மதியாக பயணிக்க முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories