டிசம்பர் 1, 2025 முதல் எஸ்பிஐ ஒரு முக்கிய சேவை நிறுத்தப்படுகிறது. OnlineSBI மற்றும் YONO Lite ஆகியவற்றில் mCASH பணமாற்று வசதி நவம்பர் 30, 2025க்குப் பிறகு பயன்படுத்த முடியாது. இதனால், முன்பைப் போல மொபைல் நம்பர் அல்லது இமெயில் அடிப்படையில் பணம் அனுப்புவது அல்லது பெறுவது சாத்தியமில்லை. இந்த சேவை நிறுத்தப்படுவதால், வாடிக்கையாளர்கள் UPI, IMPS, NEFT, RTGS போன்ற மாற்று முறைகளை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது. mCASH என்பது பயனாளர் பயனாளி-ஆகச் சேர்க்காமல், வெறும் மொபைல் எண் அல்லது இமெயில் மூலம் பணம் அனுப்ப அனுமதிக்கும் எளிய சேவையாகும்.