Gold Rate Today (November 14): வெள்ளிக்கிழமை காலையிலேயே கிடைத்த நல்ல செய்தி.! நகை கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!

Published : Nov 14, 2025, 09:48 AM IST

சென்னையில் நான்கு நாட்களுக்குப் பிறகு ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ஆர்வம் காட்டுவதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்த விலை சரிவு வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
12
மகிழ்ச்சி தந்த தங்கம் விலை

நான்கு நாட்களுக்கு பிறகு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து இல்லத்தரசிகளை சந்தோஷ அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை ஏறிய வேக்தில் குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கும் நடுத்தர அடித்தட்டு மக்களுக்கும் 2 லட்டுக்கள்தான்.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூ.11840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 480 ரூபாய் குறைந்து 94,720 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களும் இந்திய முதலீட்டாளர்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 3 ரூபாய் குறைவாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22
எல்லாத்துக்கும் அமெரிக்காதான் காரணம்

எல்லாத்துக்கும் அமெரிக்காதான் காரணம் என நிபுணர்கள் கையை காட்டியுள்ளனர். அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories