பான் செயலிழந்தாலும் உங்களுக்கு ஏற்கனவே திறந்துள்ள வங்கி கணக்குகள், பழைய முதலீடுகள் தொடரும். ஆனால் புதிய முதலீடுகள், SIP தொடங்குவது, நிறுத்துவது, பங்கு வாங்குவது/விற்கு வருவது அனைத்தும் நிறுத்தப்படும். டிசம்பர் 31-க்குப் பிறகு இணைக்க நினைத்தால் கூட முடியும்.
ஆனால் ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும். இணைப்பு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் உங்கள் பான் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். அதுவரை நிதி பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்துவிடும் என்பதால், கடைசி நிமிடத்துக்கு காத்திருக்காமல் உடனே இணைப்பது பாதுகாப்பானது.