RBI: இனி 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது? வரப்போகும் புதிய நோட்டுகள்.! ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு.!

Published : May 30, 2026, 11:03 AM IST

RBI New Currency - Plastic Notes in India: ரூபாய் நோட்டுகள் விஷயத்தில் ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 50, 100, 500 ரூபாய் தாள்களை மாற்றி, புதிய பாலிமர் நோட்டுகளை அறிமுகம் செய்ய RBI திட்டமிட்டுள்ளது. 

PREV
17
பிளாஸ்டிக் நோட்டுகளாக மாறப்போகும் இந்திய ரூபாய்கள்

நம் கையில் இருக்கும் ரூபாய் நோட்டு வெறும் பணப் பரிவர்த்தனைக்கான கருவி மட்டுமல்ல, அது நாட்டின் பொருளாதாரத்தின் அடையாளம். UPI மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், பணத்திற்கான தேவை குறையவில்லை. தற்போது புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகளை முழுமையாக மாற்றி, பாலிமர் அல்லது பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டுவர ரிசர்வ் வங்கி (RBI) திட்டமிட்டு வருகிறது.

Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!

27
கள்ள நோட்டுகளை தடுக்க முயற்சி

சமீபத்தில் பாட்னா மற்றும் மும்பையில் நடந்த RBI ஆலோசனைக் கூட்டங்களில் பாலிமர் நோட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பணத்திற்கான தேவை அதிகரிப்பு, நோட்டுகள் சீக்கிரம் கிழிந்துபோவது, கள்ள நோட்டுகளைத் தடுப்பது போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LPG New Rules 2026: இனி இவர்களுக்கு சிலிண்டர் கிடையாது.! மத்திய அரசு எடுத்த அதிர்ச்சி முடிவு.! LPG சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு.!

37
ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் சுமை

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கைமாறுகின்றன. ஒரே நோட்டு பலரால் பயன்படுத்தப்படுவதால், காகித நோட்டுகள் சீக்கிரமே கிழிந்து, அழுக்காகிவிடுகின்றன. இப்படி கிழிந்த நோட்டுகளை மீண்டும் மீண்டும் அச்சிடுவது அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. இதற்கு பாலிமர் நோட்டுகள் ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.

Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?

47
காகித நோட்டுகளுக்கு சிறந்த மாற்று

வங்கி நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் நோட்டுகள் சாதாரண காகித நோட்டுகளை விட சுமார் இரண்டரை மடங்கு அதிக காலம் உழைக்கும். தண்ணீர், ஈரம், தூசியால் இவை எளிதில் பாதிக்கப்படாது. மேலும், இந்த நோட்டுகளைப் போலியாகத் தயாரிப்பது மிகவும் கடினம். இந்தியாவில் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகமாக உள்ளதால், பிளாஸ்டிக் நோட்டுகள் சரியான தேர்வாக இருக்கும்.

Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!

57
பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்தும் நாடுகள்

ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வியட்நாம், ருமேனியா, புருனே, பப்புவா நியூ கினியா உட்பட சுமார் 60 நாடுகள் பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், உலகின் பிரபலமான கரன்சியான அமெரிக்க டாலர் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக்கிற்கு மாறவில்லை. அமெரிக்க நோட்டுகள் பருத்தி மற்றும் லினன் கலவையால் தயாரிக்கப்படுகின்றன.

67
ஏடிஎம் இயந்திரங்களில் பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்

இதற்கு முன் 2012-ஆம் ஆண்டில், பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் ஒரு சோதனை முயற்சி நடந்தது. அப்போது 10 ரூபாய் மதிப்பில் 1 பில்லியன் பிளாஸ்டிக் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட முயன்றது. ஆனால், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.

77
மேம்படுத்தப்படும் ஏடிஎம் கருவிகள்

பிளாஸ்டிக் நோட்டுகளை இப்போதும் எளிதாக அறிமுகப்படுத்திவிட முடியாது. நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களை புதிய கருவிகளைக் கொண்டு மேம்படுத்த வேண்டும். அதன் பிறகே புதிய பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்த முடியும். இதற்காக, ஏற்கனவே பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்தும் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories