இந்த முறை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். முதல் கட்டம் – அக்டோபர் 4, 2025 முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் செலுத்திய காசோலை அதே நாளிலேயே செயலாக்கப்படும். மாலை 7 மணிக்குள் வங்கி பதில் அளிக்காவிட்டால், காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இரண்டாம் கட்டம் – ஜனவரி 3, 2026 முதல் காசோலை 3 மணி நேரத்திற்குள் செயலாக்கப்பட வேண்டும், மேலும் அதில் பணம் வாடிக்கையாளர் கணக்கில் 1 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.