மொபைல் பேங்கிங் பயனர்களுக்கான Red அலர்ட்.! உங்கள் பணத்தை காப்பாற்றும் ரகசியங்கள்.!

Published : Aug 12, 2025, 10:17 AM IST

மொபைல் பேங்கிங் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதில் உள்ள அபாயங்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் அறிந்து கொள்வது அவசியம். ஹேக்கர்களின் சதி், வைரஸ் தாக்குதல்களில் இருந்துநம்மைப் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

PREV
16
மொபைல் பேங்கிங் – பாதுகாப்பான பரிமாற்றத்துக்கு அவசியமான எச்சரிக்கை டிப்ஸ்!

இன்றைய மொபைல் யுகத்தில், வங்கி சேவைகள் கூட நம் உள்ளங்கையில் வந்து விட்டன. பணம் எடுப்பது, செலுத்துவது, இ-வேலட் பயன்படுத்துவது போன்றவை அனைத்தும் சில கிளிக் மூலம் நடைபெறுகின்றன. இந்தியாவில் 92 கோடி மொபைல் பயனர்கள் உள்ள நிலையில், மொபைல் பேங்கிங் பயன்பாடு வேகமாக உயர்ந்துள்ளது. பேடிஎம், மொபிவிக், பேயூமணி, எஸ்பிஐ படி போன்ற இ-வேலட்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

26
அதிர்ச்சி தரும் அபாயங்கள்

மொபைல் பேங்கிங் எளிமையாக இருந்தாலும், பல அபாயங்கள் பதுங்கி இருக்கின்றன. ஆசிய-பசிபிக் பிராந்திய வங்கிகளில் 70% வங்கிகளின் ஆப்ஸ்களுக்கு SSL சான்றிதழ் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. SSL இல்லாத ஆப்ஸ்கள் மூலம் தகவல் ஹேக் செய்யப்பட வாய்ப்பு அதிகம். இந்திய வங்கிகளின் பெரும்பாலான ஆப்ஸ்களும் வைரஸ் தாக்குதலுக்கு நெருக்கமாக உள்ளன.

36
ஹேக்கர்களின் சதி முறைகள்

பொது Wi-Fi வழியாக வங்கி சேவைகள் பயன்படுத்தும்போது ‘log file’ திருடப்படும் அபாயம் உள்ளது. ‘Phishing’, ‘Spoofing’ போன்ற முறைகள் மூலம் போலி மெயில்கள் அனுப்பி, பயனர்களின் பாஸ்வேர்டுகள் மற்றும் கார்டு விவரங்களைப் பறிக்கின்றனர். இதனால் ‘Unauthorised access’ மற்றும் ‘Man in the middle’ போன்ற தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

புதிய வைரஸ் அபாயங்கள்

‘Conficker’, ‘Iloveyou’, ‘Botnet’ போன்ற வைரஸ்கள், மொபைல் போனில் உள்ள நிதி விவரங்களைத் திருடுகின்றன. சில வைரஸ்கள் ஆண்டி வைரஸ் அப்டேட் செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

46
பாதுகாப்பு வழிமுறைகள்

NPCI-யின் ஆலோசனைகள்

  • அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்கள், ஆப்ஸ்களை தவிர்க்கவும்.
  • SSL சான்றிதழ் உள்ள ஆப்ஸ்களையே பயன்படுத்தவும்.
  • SIM கார்டு தொலைந்தால் அதே எண்ணை பெறாமல் புதிய எண் எடுக்கவும்.
  • அதிகாரப்பூர்வ ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கவும்.
  • OTP வரவில்லை என்றால் உடனே வங்கியுடன் தொடர்பு கொள்ளவும்.
  • P.I.E, SSP பாதுகாப்பு வசதிகள் உள்ள ஆப்ஸ்களைப் பயன்படுத்தவும்.
56
வங்கிகளின் பாதுகாப்பு முயற்சிகள்

பெரும்பாலான வங்கிகள், IBM, Infosys போன்ற நிறுவனங்களிடம் பாதுகாப்பு பரிசோதனைகளை செய்து ஆப்ஸ்களை வடிவமைக்கின்றன. Cloud storage மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Security Labs சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், IT Security & Risk பிரிவுகள் 24/7 பாதுகாப்பை கண்காணிக்கின்றன.

66
பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தவும்.!

மொபைல் பேங்கிங் சேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. அதேசமயம், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால்தான் நம் பணம், தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். அதிகாரப்பூர்வ ஆப்ஸ்கள், SSL சான்றிதழ்கள், OTP பாதுகாப்பு, மற்றும் நம்பகமான நெட்வொர்க் பயன்பாடு போன்ற அடிப்படை பாதுகாப்பு வழிகளை கடைபிடிப்போம். தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் வரும் அபாயங்களை சரியான முறையில் சமாளிப்பதே பாதுகாப்பான மொபைல் பேங்கிங்கின் ரகசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories