Published : Aug 12, 2025, 09:56 AM ISTUpdated : Aug 12, 2025, 09:57 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்து, கிராமுக்கு ரூ.9295 ஆகவும், சவரனுக்கு ரூ.74,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்தது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
23
ஆபரணத்தங்கத்தின் விலை சரிவு!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ,9295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 640 ரூபாய் குறைந்து 74,360 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 126 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
33
"வரும் வாரத்திலும் குறையும்"
அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.