பிறகு ரூ.10,000 அபராதம் என்ற குழப்பம் எங்கிருந்து வந்தது? என்று நீங்கள் கேட்கலாம். அண்மை காலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைத் தடுப்பதற்காக, ரிசர்வ் வங்கி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை ஆலோசித்து வருகிறது. அதன்படி ஒரு பயனர், தனக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய நபரின் கணக்கிற்கு முதன்முறையாக ₹10,000-க்கும் அதிகமாக டிஜிட்டல் முறையில் (UPI, IMPS, NEFT) பணம் அனுப்பும்போது, அந்தப் பரிவர்த்தனை உடனடியாகப் போய்ச் சேராமல் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்
இந்த இடைவெளியில், தவறுதலாகப் பணம் அனுப்பப்பட்டிருந்தால் அதை வாடிக்கையாளர் ரத்து செய்ய முடியும். இந்த ஆன்லைன் மோசடி தடுப்பு நடவடிக்கைக்கான "ரூ.10,000" என்ற வரம்பை தவறாகப் புரிந்துகொண்ட சிலர், 'பல கணக்குகள் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்' என வதந்தியாகத் திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். இது மக்களிடையே குழப்பம் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டது.