உத்தரவாத ஓய்வூதியம்: சந்தாதாரர் தனது 60 வயது வரை (அவர் இணையும் வயதைப் பொறுத்து) குறிப்பிட்ட பிரீமியம் தொகையை மாதந்தோறும் செலுத்தி வர வேண்டும். 60 வயதுக்குப் பின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.
துணைவிக்கான பாதுகாப்பு: சந்தாதாரர் காலமானால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு அதே ஓய்வூதியத் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
வாரிசுதாரருக்கு மொத்தத் தொகை: கணவன், மனைவி இருவருமே காலமான பிறகு, அவர்கள் சேர்த்து வைத்த மொத்த கார்ப்பஸ் (Corpus) தொகையும் வாரிசுதாரரிடம் (Nominee) ஒப்படைக்கப்படும்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தை 2031-ம் நிதியாண்டு வரை நீட்டிக்க அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சூழலில், ஓய்வூதியத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சந்தாதாரர்கள் செலுத்த வேண்டிய மாத பிரீமியம் தொகையும் சற்று அதிகரிக்கும். எனினும், இது நாட்டின் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதுமைக் காலத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரப் பாதுகாப்பை வழங்கும் என்பதில் ஐயமில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.