"RBI-யின் 'Payments Vision 2025' திட்டத்தின் முக்கிய நோக்கமே, வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களை இன்னும் திறமையாக மாற்றுவதுதான். மலிவான, வேகமான, வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய பணப் பரிமாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற G20 நாடுகளின் இலக்குடன் இது இணைந்து செயல்படுகிறது" என்று RBI குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணம், பயனாளியின் வங்கிக்கு வந்து சேர்ந்த பிறகு, அதை வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கும் கட்டத்தில்தான் அதிக தாமதம் ஏற்படுவதாக RBI கண்டறிந்துள்ளது. "பணப் பரிமாற்ற வேகத்தில் உள்ள சவால்களில் ஒன்று, பயனாளியின் வங்கியில் நடக்கிறது. அதாவது, பணம் வங்கிக்கு வந்ததிலிருந்து, வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் வரை அதிக நேரம் எடுக்கிறது," என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு உடனே தகவல்
தற்போதுள்ள நடைமுறைகளை ஆய்வு செய்த பிறகு, பணத்தை விரைவாக வரவு வைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் செயல்முறைகளை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. "வெளிநாட்டிலிருந்து பணம் வந்தவுடன், அந்தத் தகவலை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, வங்கி வேலை நேரத்திற்குப் பிறகு பணம் வந்தால், அடுத்த வேலை நாளின் தொடக்கத்திலேயே வாடிக்கையாளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று RBI உத்தரவிட்டுள்ளது.