RBI: வெளிநாட்டு பணம் இனி 1 மணி நேரத்தில் கிரெடிட் ஆகும்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

Published : Apr 09, 2026, 08:11 PM IST

RBI New Rules: வெளிநாட்டுப் பணம் வாடிக்கையாளர்களின் கைக்கு இனிமேல் உடனே வந்து சேரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தை பரிமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை களைய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பினால், அது நம்முடைய பேங்க் அக்கவுன்ட்டுக்கு வந்து சேர சில சமயம் தாமதம் ஆகும். இந்த பிரச்சனையை சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வேகமாக வரவு வைக்க, நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில், வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களில் செயல்திறனை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்று RBI கூறியுள்ளது. மேலும், G20 நாடுகள் நிர்ணயித்த உலகளாவிய இலக்குகளுடன் இது ஒத்துப்போகிறது என்றும் தெரிவித்துள்ளது.

24
ஆர்பிஐ கூறியது என்ன?

"RBI-யின் 'Payments Vision 2025' திட்டத்தின் முக்கிய நோக்கமே, வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களை இன்னும் திறமையாக மாற்றுவதுதான். மலிவான, வேகமான, வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய பணப் பரிமாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற G20 நாடுகளின் இலக்குடன் இது இணைந்து செயல்படுகிறது" என்று RBI குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணம், பயனாளியின் வங்கிக்கு வந்து சேர்ந்த பிறகு, அதை வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கும் கட்டத்தில்தான் அதிக தாமதம் ஏற்படுவதாக RBI கண்டறிந்துள்ளது. "பணப் பரிமாற்ற வேகத்தில் உள்ள சவால்களில் ஒன்று, பயனாளியின் வங்கியில் நடக்கிறது. அதாவது, பணம் வங்கிக்கு வந்ததிலிருந்து, வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் வரை அதிக நேரம் எடுக்கிறது," என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு உடனே தகவல்

தற்போதுள்ள நடைமுறைகளை ஆய்வு செய்த பிறகு, பணத்தை விரைவாக வரவு வைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் செயல்முறைகளை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. "வெளிநாட்டிலிருந்து பணம் வந்தவுடன், அந்தத் தகவலை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, வங்கி வேலை நேரத்திற்குப் பிறகு பணம் வந்தால், அடுத்த வேலை நாளின் தொடக்கத்திலேயே வாடிக்கையாளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று RBI உத்தரவிட்டுள்ளது.

34
பணம் வரவு வைக்க தாமதம் ஏன்?

மேலும், வங்கிகள் தங்கள் 'Nostro' கணக்குகளின் அன்றைய தின இறுதி ஸ்டேட்மென்ட்டை நம்பி இருப்பதால் தாமதம் ஏற்படுவதையும் RBI சுட்டிக்காட்டியுள்ளது. Nostro கணக்கு என்பது, ஒரு இந்திய வங்கி, வெளிநாட்டு வங்கியில் அந்த நாட்டின் கரன்சியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு ஆகும். "பல வங்கிகள் Nostro கணக்குகளில் பணம் வந்ததை உறுதிப்படுத்த, நாள் முடிவில் வரும் ஸ்டேட்மென்ட்டிற்காக காத்திருக்கின்றன. இதுவே வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்க தாமதம் ஏற்படக் காரணம்," என்று சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும்

இந்த தாமதத்தைக் குறைக்க, வங்கிகள் அடிக்கடி கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. "இந்த செயல்முறையை விரைவுபடுத்த, வங்கிகள் Nostro கணக்குகளை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். முடிந்தால், நிகழ்நேரத்தில் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் குறிப்பிட்ட இடைவெளியில் இதைச் செய்ய வேண்டும்" என்று RBI கூறியுள்ளது.

44
அதே நாளில் வரவு வைக்க வேண்டும்

"அந்நியச் செலாவணி சந்தை நேரத்தில் பெறப்படும் வெளிநாட்டுப் பணத்தை, அதே வேலை நாளில் பயனாளியின் கணக்கில் வரவு வைக்க வங்கிகள் முயற்சி செய்ய வேண்டும்" என்றும் அது மேலும் கூறியது. கூடுதலாக, வங்கிகள் தங்கள் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் மற்றும் FEMA விதிகளுக்கு உட்பட்டு, தனிநபர்களின் கணக்குகளுக்கு வரும் பணத்தை நேரடியாக வரவு வைக்க 'ஸ்ட்ரெய்ட்-த்ரூ பிராசஸிங்' (Straight-Through Processing) முறையை அறிமுகப்படுத்தலாம்.

"வாடிக்கையாளர்கள் அந்நியச் செலாவணி தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், தங்கள் பரிவர்த்தனைகளின் நிலையைக் கண்காணிக்கவும் டிஜிட்டல் தளங்களை வங்கிகள் உருவாக்க வேண்டும்," என்றும் RBI கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புதிய உத்தரவுகள், சுற்றறிக்கை வெளியான நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories