தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க

Published : Dec 07, 2025, 02:05 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி, கோல்ட் மெட்டல் லோன் (GML) தொடர்பாக புதிய கடுமையான விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தங்க கடன் சந்தையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும், தவறான பயன்பாட்டைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

PREV
14
தங்கம் தொடர்பான வங்கி விதிகள்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கோல்ட் மெட்டல் லோன் (GML) தொடர்பான விதிகளை, புதிய கடுமையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இந்த வழிகாட்டுதலின் நோக்கம், தங்க கடன் வழங்குவதில் அதிக கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் கண்காணிப்பை உருவாக்குவதாகும். வங்கிகள் இந்தச் சட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தங்க வணிகத்தில் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த மாற்றம் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பார்க்கப்படுகிறது.

24
தங்க கடன் விதிகள்

புதிய வடிவமைப்பில், GML இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தங்கத்துடன் இணைந்த கடன் மற்றும் தங்கப் பணமாக்குதல் திட்டம் (GMS) மூலம் சேகரிக்கப்பட்ட தங்கத்துடன் இணைந்தது கடன். இறக்குமதி தங்கத்தை பயன்படுத்தி கடன் வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட வங்கிகளுக்கு மட்டும் அனுமதி; GMS மூலம் சேகரிக்கப்பட்ட தங்கத்திலிருந்து கடன் வழங்குவது குறிப்பிட்ட வங்கிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த தங்க கடன் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் போன்ற நகைத் துறையினருக்கு மட்டுமே கிடைக்கும்.

34
விலை மாற்றம்

முக்கிய மாற்றம் என்னவெனில், வங்கிகள் கடனாக வழங்கிய தங்கத்தின் மதிப்பீடு தினசரி LBMA Gold AM விலை மற்றும் ஆர்பிஐ வெளியிடும் USD/INR குறிப்பு விகிதத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும். இது விலை மாற்றத்தால் ஏற்படும் குழப்பங்களை குறைக்கும். திருப்பிச் செலுத்துதல் பொதுவாக ரூபாயில் இருக்கும்; ஆனால் GMS அடிப்படையிலான கடனில் தங்கமாகவே தள்ளுபடி செய்ய அனுமதி வழங்கப்படலாம். மேலும், கடன் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

44
ரிசர்வ் வங்கி

ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் குறிப்பிட்ட நேரக் கட்டளை பின்பற்ற வேண்டும். மற்ற நகை வணிகர்களுக்கு அதிகபட்சம் 270 நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ, அனைத்து வங்கிகளும் தங்கள் GML பணிகளில் மூலதன மேற்பார்வை அமைப்பு மற்றும் அபாய மேலாண்மை நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளது. காலாண்டு அடிப்படையில் ஆர்பிஐ-க்கு வங்கிகள் தங்கள் GML நிலையை அறிக்கை செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் தங்க கடன் சந்தையில் தவறான பயன்பாட்டை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உயர்த்தவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சந்தேகமில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories