'Master Direction- Reserve Bank of India (Non-Banking Financial Company - Scale Based Regulation) Directions, 2023' என்ற விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நகைக்கடன் என்பது, அடகு வைக்கப்படும் தங்க நகைகள் அல்லது பொருட்களுக்கு எதிராக வழங்கப்படும் கடன். கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், கடன் கொடுத்தவர்கள் அடகு வைக்கப்பட்ட தங்கத்தை ஏலம் விட்டு நிலுவைத் தொகையை வசூலிக்கலாம். ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஏலத்தின் மூலம் கடன் தொகைக்கு மேல் கிடைக்கும் எந்தவொரு உபரித் தொகையும் கடன் வாங்கியவருக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மார்ச் 31, 2025 நிலவரப்படி, அந்நிறுவனத்தின் நிதி நிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறியது தொடர்பான மேற்பார்வை கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான கடிதப் பரிமாற்றங்களின் அடிப்படையில், ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது' என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.