இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மீண்டும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் அது பொதுமக்களின் நலனுக்கும், வைப்புதாரர்களின் நிதி பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கி இனி புதிய டெபாசிட்களை ஏற்கவும், ஏற்கனவே உள்ள வைப்புகளை திருப்பிச் செலுத்தவும் அனுமதி இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் செயல்பட்டு வந்த சர்வோதயா கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.