இன்றைய காலக்கட்டத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல், பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர். சிறுவர்கள் முதல் மூத்த குடிமகக்ள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற, மத்திய அரசின் முழு உத்தரவாதம் கொண்ட ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் தான் தபால் நிலையத்தின் 'சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்' (SCSS).
திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் முதலீட்டு வரம்பு
இது முற்றிலும் 'ஜீரோ ரிஸ்க்' கொண்ட ஒரு திட்டமாகும். இதில் முதலீடு செய்யப்படும் அசல் பணத்திற்கு அரசு முழுப் பாதுகாப்பு அளிக்கிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், தம்பதியராக இணைந்து கூட்டு கணக்கு (Joint Account) துவங்கினால் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ், ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் பெற்றுக் கொள்ள முடியும்.