
நீங்களும் மாதம் ரூ.20,500 சம்பாதிக்க விரும்புகிறீர்களா? ஆம் எனில், தபால் அலுவலகத்தின் இந்த சூப்பர்ஹிட் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ரூ.20,500 கிடைக்கும். எப்படி என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஓய்வு பெற்ற பெற்ற பின்னர் யாரையும் சார்ந்திருக்காமல் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் கனவாக உள்ளது. தங்கள் சேமிப்பின் மூலம் பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.. மூத்த குடிமக்களின் இந்தத் தேவைகளை மனதில் கொண்டு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS) அரசாங்கம் நடத்துகிறது.
இதில், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில், மக்கள் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக ரூ.20,500 பெறுகிறார்கள். இந்த பணம் 5 ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
குறைந்தபட்ச முதலீடு ரூ 1,000
தபால் அலுவலக மூத்த குடிமக்கள் திட்டத்தின் (Post Office Senior Citizen Scheme) சிறப்பு என்னவென்றால், குறைந்தபட்சம் ரூ.1,000-ல் முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்பும் மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வு இருக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் உங்களுக்கு வட்டி கிடைக்கும், இது உங்கள் மாதாந்திர செலவினங்களைச் சந்திப்பதை எளிதாக்கும்.
ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டை வெறும் ரூ.969க்கு வழங்கும் ஏர்டெல் நிறுவனம்
தகுதி
இந்தத் திட்டம் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கானது. இது தவிர, 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் (VRS) இத்திட்டத்தில் பயன்பெறலாம். பாதுகாப்புப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களும் 50 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். சிறப்பு என்னவென்றால், இந்தக் கணக்கை உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்காகவும் தொடங்கலாம், இதனால் இருவரும் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.
அஞ்சல் அலுவலகத்தில் SCSS கணக்கு தொடங்கப்படும்
மூத்த குடிமக்கள் தங்கள் SCSS கணக்கை எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கும் சென்று திறக்கலாம். கணக்கு தொடங்க குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும். இதில், நீங்கள் ரூ.1,000 மடங்குகளில் முதலீடு செய்யலாம், ஆனால் முதலீட்டின் அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சத்தை தாண்டக்கூடாது.
வட்டி எவ்வளவு?
இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது, இது மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிகம். இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால், அவருக்கு ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.20,500 கிடைக்கும். இது வழக்கமான வருமானத்தின் வலுவான ஆதாரமாக மாறும், இது ஓய்வுக்குப் பிறகும் நிதி ரீதியாக உதவும்.
மாதம் 1,500 டெபாசிட்டுக்கு ரூ.35 லட்சம் வரை கொடுக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!
திட்டத்தின் நன்மைகள்
அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டுக்கு ஒரு சிறந்த வழி. இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பணத்தையும் பாதுகாப்பாக வைக்கிறது. எனவே, ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைத் திட்டமிடுபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.