சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், தனது மகளை விடுவிக்குமாறு உகாண்டா அதிபருக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை விடுத்தும் கூட் இதுவரை அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஆடம்பர வாழ்க்கைக்காக சமூக வலைதளங்களில் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் வசுந்தரா, இன்று சிறையில் இருக்கிறார்.
26 வயதான வசுந்தரா ஓஸ்வால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இந்திய பில்லியனர் பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஓஸ்வால் ஆகியோரின் மகள். அவள் தந்தையின் தொழிலில் தீவிர பங்கு வகிக்கிறார். வசுந்தரா உகாண்டாவில் உள்ள நிறுவனத்தின் கூடுதல் நடுநிலை மது ஆலைக்கு விஜயம் செய்தபோது ஆயுதம் தாங்கிய 20 நபர்களால் கைது செய்யப்பட்டார்.
மதிப்புமிக்க சொத்துக்களைத் திருடி $2,00,000 கடனாகப் பெற்றதாகக் கூறப்படும் முன்னாள் ஊழியர் ஒருவரின் தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் வசுந்தரா கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
நோயல் டாடாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?