எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. இதற்காக முதலீடு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். வெவ்வேறு முதலீட்டு விருப்பங்கள் இருக்கும் நிலையில், சிலர் பாதுகாப்பான முதலீட்டை நோக்கியும், சிலர் ஆபத்தான முதலீட்டை நோக்கியும் செல்கின்றனர்.
பாதுகாப்பான முதலீட்டிற்குச் செல்ல விரும்புவோருக்கும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்புவோருக்கும் பல்வேறு திட்டங்களை போஸ்ட் ஆபிஸ் செயல்படுத்தி வருகிறது. அரசால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.