பாலிசி தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, அதன் மீது கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது. பாலிசி காலத்தில் பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், காப்பீட்டுத் தொகை முழுவதுமாக அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். இதனால், உங்கள் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
ஒருவேளை பாலிசியைத் தொடர முடியாவிட்டால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதை சரண்டர் செய்யும் வசதியும் உண்டு. ஆனால், அப்படிச் செய்தால் முழுமையான பலன்கள் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முதிர்வுத் தொகை என்பது ஒரு உதாரணக் கணக்கீடு மட்டுமே; இது வயது, காப்பீட்டுத் தொகை மற்றும் போனஸ் விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே, முதலீடு செய்வதற்கு முன் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகி முழு விவரங்களையும் உறுதி செய்துகொள்வது நல்லது.
வருமான வரி விலக்கு
நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொாகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெற முடியும். மேலும், முதிர்வுத் தொகைகக்கும் பிரிவு 10(10D)-ன் கீழ் வரி விலக்கு உண்டு. நீங்கள் இந்தியாவில் எந்த ஊருக்கு இடம்பெயர்ந்தாலும், உங்கள் பாலிசியை நாட்டின் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திற்கும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.