பிரதமர் விஸ்வகர்மா யோஜனாவின் கீழ், நுண், சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வகையான தொழில்கள் அடங்கும். அவையாவன: தச்சர், கொல்லர், பூட்டு செய்பவர், படகு கட்டுபவர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, செருப்பு தைப்பவர், கட்டுமானத் தொழிலாளி, ஆயுதம் தயாரிப்பவர், விளக்குமாறு தயாரிப்பவர், பாரம்பரிய பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பவர், நாவிதர், மாலை கட்டுபவர், சலவைத் தொழிலாளி, தையல்காரர், சுத்தியல், கூடை, பாய் மற்றும் மீன்பிடி வலை தயாரிப்பவர் ஆகியோர்.