இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை மாற்றமின்றி நிலையாக இருக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மற்றும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கான அறிவிப்பு
அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை எண்ணெய் நிறுவனங்களே அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.