Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலை குறைகிறது? மத்திய அரசு கொடுத்த அதிரடி அப்டேட்!

Published : Jun 19, 2026, 09:52 AM IST

Petrol, Diesel Price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிரடி அப்டேட் கொடுத்துள்ளது.

PREV
14
பெட்ரோல், டீசல் விலை குறைகிறதா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. எனவே, உலக நிலவரத்துக்கு ஏற்பவே பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவியபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலர் வரை உயர்ந்தது. தற்போது அந்த விலை குறையத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக நேற்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா பேசினார். அப்போது அவர் "கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 120 டாலர் வரை சென்றது உங்களுக்குத் தெரியும். இப்போது அது குறையத் தொடங்கியுள்ளது" என்றார். மேலும், உலக எரிசக்தி சந்தையில் நடக்கும் மாற்றங்களை அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

24
கச்சா எண்ணெய் விலை குறைகிறது

"சர்வதேச சூழலுக்கு ஏற்ப, சில்லறை விற்பனை விலைகள் குறித்த சரியான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும். இந்த விஷயத்தில் அரசு கவனமாக உள்ளது" என்று சுஜாதா ஷர்மா கூறினார். கச்சா எண்ணெய் விலை குறைவதால் எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் லாபம் அதிகரிக்குமா, அதன் மூலம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்தியா எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் சார்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதில்லை என்றும், வர்த்தக மற்றும் செயல்பாட்டுத் தேவைகளின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்யப்படுவதாகவும் சுஜாதா ஷர்மா மீண்டும் சொன்னார். "நான் முன்பே சொன்னது போல, நாங்கள் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோம்" என்றார் அவர்.

34
கேஸ் சிலிண்டர் விநியோகம் எப்படி இருக்கு?

எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார். "அந்தக் கச்சா எண்ணெய்யை நமது சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்க முடிய வேண்டும், அதன் விலை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும், மேலும் தடையின்றி சப்ளை கிடைக்க வேண்டும். இந்த முக்கிய விஷயங்களை கருத்தில் கொண்டுதான் எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன," என்று அவர் கூறினார்.

மேற்கு ஆசியாவில் நெருக்கடி இருந்தபோதிலும், உள்நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் சீராக இருந்ததாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 1.36 கோடி பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 1.47 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், 22,945 டன் வர்த்தக எல்பிஜி மற்றும் 1.98 லட்சம் ஐந்து கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

44
99,100 பேர் எல்ஜிபி இணைப்புகளை ஒப்படைத்தனர்

மேலும், மார்ச் மாதம் முதல் தற்போது வரை 10.02 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு (PNG) இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 9.94 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் PNG இணைப்புக்காக பதிவு செய்துள்ளனர். குழாய் வழி எரிவாயு இணைப்புக்கு மாறியதால், சுமார் 99,100 பேர் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகளுக்குப் பிறகு, கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்புவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories